Posts

வேண்டும் வேண்டும் உன் கவிதைகளை என்றும் ரசிக்கும் மனம் வேண்டும்! மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.
சக்தி தந்த பாரதி! துன்ப மிலாத நிலையே சக்தி, தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி; அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி; இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, எண்ணத் திருக்கும் எரியயே சக்தி, முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, முக்தி நிலையின் முடிவே சக்தி. சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, சொல்லில் விளங்கும் சுடரே சக்தி; தீம்பழந் தன்னில் சுவையே சக்தி, தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி; பாம்பை அடிக்கும் படையே சக்தி; பாட்டினில் வந்த களியே சக்தி; சாம்பரைப் பூசி மலைமிசை வாழும் சங்கரன் அன்புத் தழலே சக்தி. வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி, மாநிலம் காக்கும் மதியே சக்தி; தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி, சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி, வீழ்வு தடுக்கும் விறலே சக்தி, விண்ணை யளக்கும் விரிவே சக்தி; ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி, உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.